திங்கள், 26 ஜூலை, 2010

மறக்க நினைக்கும் வரிகள்


சில கன போராட்டங்கள்
உனக்கும் எனக்குமாய்
உமிழ் நீரை விழுங்குவதில்!!!!
நொடிகொரு தரம்
நீ விழுங்கி எத்தனிகிறாய்
நான் விழுங்கி மூழ்கி போகிறேன்
அடி நாவில் சுழன்று
ஊற்றெடுக்கும் உமிழ் நீரோடு...

புள்ளி வைத்து கோலமிடும்
உன் விழிகள் கொண்டு
முற்று புள்ளிகளை சுழித்து
கமாக்கலாக்க விலைகிறாய்,
கமாக்களில் கறை புரண்டு
மதம் பிடித்து ஓடும்
என் தேவைகளை
மதகு கொண்டு
பூட்டி கொள்கிறேன்.

துவண்ட உன் விழிகளை ஏறிட
திராணியற்று,
என் விழிகொண்டு பாய்கிறேன்
அங்கும் இங்கும்
ஒரு தெரு நாயை போல்...
வேறு வழி இன்றி
பட்சாதாபத்தின் உச்சமாய்
விடுவிக்கிறாய் என்னை..

உன்னில் இருந்து என்னை விலக்கி
வெளியேறுகிறேன்
கரு கலைந்த தாயின் துடிப்புகள்
உன் நாடியெங்கும் பரவி கிடந்தது
கடல் அலையின்
கொந்தளிப்பை கடிவாளமிட்டு
உப்புக்கள் சுழழும் வேட்க்கை நிறைந்த
வெப்பமான ஒரு துளி மட்டும்
உமிழ முடிந்தது
என் ரப்பையின் வழியே...

இப்படிக்கு உன் காதலன் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக