புதன், 9 செப்டம்பர், 2020

பயண மார்க்கம்

  


இரவின் தீர்த்தங்கள் உதிரும் துளிகளின் பிரவாகம் பாதையின் தகவுகளுடன் அர்த்தங்களாய் முகிழத் துவங்கியிருந்தது கணங்களில், என் பார்வை முதல் அடியெடுக்க, உன் மையல் இரண்டாம் அடி வைக்க சில தூரம் சலனம் கொண்டோம், உன் புன்னகை அப்பயணத்தின் முதல் திருப்பத்தை தந்தது, அங்கே கொஞ்சம் முயங்கி  இளைப்பாறி இருந்தேன், இளைப்பாறுதல் மடி சாயாமல் எப்படி முழுமை பெறும்?  உன் ஸ்பரிசம் தீண்டி சுகிக்கிறேன், நீயும் அவ்வாறே அதன் அதிர்வெண்களில் கொஞ்சம் தாவித் தவிப் பயணிக்கிறோம், இவ்விரவின் இலக்கை அடைவதற்கு உகந்த வழி யென ஸ்பரிசங்களின் உரசலில் அறிகிறோம் ஆகையால் ; இப்பயணதிற்கு முழுமையாக நம்மை ஒப்புக் கொடுக்கிறோம், உன் மடி தீண்டிய என் இதழ் முத்தங்கள் மேலும் கொஞ்சம் நம்மை நகர்த்த, என் நுதல் மீது இதழ் பதித்து நீயும் கடந்து வருகிறாய் ஒரு முகட்டிற்கு, இரவின் உச்சியில் தீ மூட்டி குளிர் காய்தல் பெருஞ்சுகமல்லவா? சிக்கி முக்கியென ஆலிங்கனத் தணல் துளிர்க்க ஒருவர் உடல் ஒருவருக்கு போர்வையென விரவிக் கலக்கிறோம், களைந்த மஞ்சமெல்லாம் அச்சுவனப் பயணத்தின் தடம், உடல் காய்தல் ரணம்,  அதை மேய்தலும் மேயத் தருவதும் ஏகம் ஊறும் சுகம்...

ஒரு மரணம் போல நாம் இன்னும் அந்த மார்க்கத்தில் இருந்து மீளவே இல்லை... 


~ சூர்யபாலா., 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக